மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் நகர் போக்கர் வீதியிலுள்ள வீடொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின்போது தன்வசமிருந்த சுமார் 2 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நகைகளும் ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் தமீம் தௌபீக்கா (வயது 32) தெரிவித்தார்.
இச்சம்பவம்பற்றி அவர் மேலும் கூறியதாவது,
திங்கட்கிழமை நள்ளிரவு ரமழான் நோன்புக்கால வணக்கவழிபாடுகளை முடித்து விட்டு வீட்டார் அனைவரும் நடுநிசியைத் தாண்டி அதிகாலை ஒரு மணியளவில் நித்திரைக்குச் சென்று விட்டோம்.
வழமைபோன்று நோன்பு அனுஷ்டிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது இரண்டு அலுமாரிகள் திறந்து காணப்பட்டதோடு அலுமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உடுதுணிகள் உட்பட பொருட்கள் யாவும் சிதறிக் கிடந்தன.
கைப்பைகள் வாசலுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு அங்குமிங்கும் போடப்பட்டிருந்தன.
இதன்போது அலுமாரிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய நகைகளும் ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டிருந்ததை அறியமுடிகின்றது” என்றார்.
“திருடர்கள் வீட்டுக்குள்ளேயே நீண்ட நேரம் இருந்து பொருட்களை ஒவ்வொன்றாக பரிசோதித்து தங்க நகைகளை திருடியுள்ளனர்.
இதன்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எமக்கு ஏதாவது மயக்க மருந்து தெளித்திருந்தார்களா என்பது பற்றிய ஐயம் இருப்பதாகவும்” தௌபீக்கா குறிப்பிட்டார்.
திருடர்கள் மதிலால் பாய்ந்து வந்து வீட்டுக்கதவுளைத் திறந்து நன்கு பரிசோதித்து திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இந்த வீதியின் மறுபக்கத்திலுள்ள வீடொன்றிலிருந்த அலவாங்கு ஒன்றையும் எடுத்து வந்து வீட்டுக் கதவுகளைத் திறக்க திருடர்கள் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸாரும் மட்டக்களப்பு தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM