(இராஜதுரை ஹஷான்)
சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினர் விதித்துள்ள சுகாதார அறிவுறுத்தல்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உட்பட அனைத்து வேடபாளர்களும் கடுமையாக பின்பற்றி எதிர்வரும் நாட்களின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுப்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இன்று தொடக்கம் முன்று நாட்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எவ்வித தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் இடம் பெறாது. அத்துடன் வேட்பாளர்களின் சிறு மற்றும் மாபெரும் கூட்டங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைகளுக்கு அமைய சுகாதார பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்த இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தும் போது சமூக இடைவெளியை பேணல், கூட்டம் நடத்த முன்னர் குறித்த இடத்தை சுகாதார பாதுகாப்பினரது கண்காணிப்புக்குள் கொண்டு வரல், குறைந்தளவிலான ஆதரவாளர்களை பங்குப்பற்ற செய்யல். அவர்களின் சுகாதரம் தொடர்பில் அதிக கவனம்செலுத்தல். அத்துடன் முக கவசம்அணிதல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பில் கூட்ட ஏற்பாட்டாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாத்திரமல்ல பொது மக்கள் அனைவரும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான நிலையை வெற்றிக்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM