(எம்.எப்.எம்.பஸீர்)
வடக்கு, வட மேல் கடற்பரப்பு ஊடாக இடம்பெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சிறப்புத்திட்டங்களை கடற்படை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, வடக்கு கடற்பரப்பு ஊடாக நாட்டுக்குள் போதைப் பொருள், ஆட்கடத்தல், தங்கம் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுக்க வடக்கு கடலோரத்தை மையப்படுத்தி விஷேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார கேசரிக்கு கூறினார்.
குறிப்பாக தர்போதைய கொரோனாவுடன் கூடிய சூழலில், சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் ஊடாக நாட்டுக்குள் குறிப்பாக வடக்கில் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளமையை கருத்தில் கொண்டு அது தொடர்பில் அறிவுறுத்தல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.
'வடக்கு கடல் மார்க்கத்தில் இடம்பெறும் குற்றங்களான போதைப் பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், பீடி இலை கடத்தல், தங்கக் கடத்தல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளுடன் மீனவர்கள் தொடர்புபடுகின்றமை, இதுவரை கைப்பற்றப்பட்ட, கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள் ஊடாக தெரியவந்துள்ளது.
எனவே, மீனவர்களில் சிலர் எமக்கு ஏற்கனவே இவ்வாறான கடத்தல் குறித்த தகவல்களை தரும் நிலையில், மீனவ சமூகத்தில் இருந்து இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்கலைப் பெற்றுக்கொள்ள விஷேட திட்டமொன்று வகுக்கப்பட்டு, வடக்கில் தற்போது அது அமுல் செய்யப்பட்டு வருகின்றது.' என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM