கொழும்பில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்தும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தும் மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை(11) கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரின் ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்ததுடன் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததை கண்டித்தே இந்த கண்ட ஆர்ப்பாட்டமும் கவனஈர்ப்பு போராட்டமும் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
மட்டக்களப்பு நகரின் காந்திப்பூவுக்கு முன்னாள் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரின் ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்து அவரை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரி மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியதுடன் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
“தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், முன்னாள் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ விற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும், ஊடவியலாளர்களின் சமதந்திரத்தைப் பறிக்காதே, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், சுதந்திர ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்காதே, போன்ற மும்மொழிகழிலும் எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கி கோசங்களை எழுப்பி இதன் போது ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM