தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

11 Jul, 2020 | 04:47 PM
image

கொழும்பில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்தும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தும் மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை(11) கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரின் ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்ததுடன் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததை கண்டித்தே இந்த கண்ட ஆர்ப்பாட்டமும் கவனஈர்ப்பு போராட்டமும் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

மட்டக்களப்பு நகரின் காந்திப்பூவுக்கு முன்னாள் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது  கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரின் ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்து அவரை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரி மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியதுடன் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

“தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், முன்னாள் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ விற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும், ஊடவியலாளர்களின் சமதந்திரத்தைப் பறிக்காதே, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், சுதந்திர ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்காதே, போன்ற மும்மொழிகழிலும் எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கி கோசங்களை எழுப்பி இதன் போது ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08