பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை (எட்கா) இந்த ஆண்டு இறுதிக்குள் கைச்சாத்திட இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள (எட்கா) உடன்படிக்கையின் முன்னேற்றங்கள் தொடர்பில் மீளாய்வு செய்து விரைவில் தீர்வு எட்டப்படும் என இலங்கையின் வர்த்தக நிபுணர்குழு தெரிவித்துள்ளது. அதேபோல் உடன்படிக்கை தொடர்பில் ஆராய இந்த மாதம் நடுப்பகுதியில் இந்திய வர்த்தக மற்றும் தொழிநுட்ப நிபுணர்குழு இலங்கை வருகின்றது.
இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் எட்கா உடன்படிக்கை செய்துகொள்வது தொடர்பில் இரண்டு நாடுகளும் தொடர்ச்சியாக அக்கறை செலுத்திவரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு நாடுகளும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக இணக்கம் தெரிவித்துள்ளன.
இந்தியா சென்றுள்ள இலங்கையின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமர விக்கிரம தலைமையினால இலங்கை பொருளாதார நிபுணர்குழு இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழிநுட்ப நிபுணர்குழுவை நேற்று புது டில்லியில் சந்தித்தது. இந்த சந்திப்பின்போதே இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் கைச்சாத்திட இணக்கம் கண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM