(இராஜதுரை ஹஷான்)
வைரஸ் போல் தீவிரமாக பரவலடைந்துள்ள போதைப்பொருள் கடத்தல் வியாபாரம், பாதாள குழுவினரது செயற்பாடு ஆகியவற்றை முழுமையாக இல்லாதொழிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலமையிலான அரசாங்கத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதியின் திட்டங்களை செயற்படுத்தும் அரசாங்கத்தை ஸ்தாபிக்க அனைத்து இன மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.
ஹொரன பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போதைப்பொருள் வியாபாரம் வளர்ச்சியடைந்துள்ளதால் இளம் தலைமுறையினர் எதிர்காலத்தை இல்லாதொழித்துள்ளார்கள். அத்துடன் பாதாள குழுவினரது செயற்பாடுகளின் காரணமாக பொது மக்களின் அமைதியான வாழ்க்கை முறைமை அச்சத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
ஆகவே இவ்விரண்டு வைரஸையும் முழுமையாக இல்லாதொழிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சிறைச்சாலைக்குள் இருந்துக்கு கொண்டு வலைத்தளங்கள் ஊடாக போதைப்பொருள் கடத்தல் வியாபாரங்களை முன்னெடுத்தவர்களின் செயற்பாடுகள் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
ஜனாதிபதி கோத்ததாபய ராஜபக்ஷவின் கொள்கை மற்றும் சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் முரண்பாடான அரசாங்கம் தோற்றம் பெற்றால் நல்லாட்சி அரசாங்கத்தின் போன்று பலவீனமாக அரச நிர்வாகம் மீண்டும் தோற்றம் பெறும். ஆகவே அனைத்து இன மக்களும் ஒன்றினைந்து பொதுஜன பெரமுன தலைமையிலான பலமான மற்றும் சிறந்த அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM