அன்றே குரங்கிற்கு வந்த கொரோனா அச்சம்

Published By: Digital Desk 3

10 Jul, 2020 | 04:32 PM
image

குரங்கு ஒன்று துணியொன்றை பயன்படுத்தி முகக்கசம் அணிந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

குறித்த காணொளி புதியதல்ல என்றாலும்  இது குறைந்தது ஒரு வருடமாக இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் முக்கியத்துவத்துடன் ஒரு விழிப்புணர்வு போன்று மீண்டும் தோன்றியுள்ளது.

இந்தியாவில், வெளியில் செல்வோர் அனைத்து மாநிலங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பூட்டுதல்களுடன் இணைந்து முகமூடிகளை அனைத்து மக்களும் பயன்படுத்துவதால் கொரோனா வைரஸ் அலைகளைத் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

வீட்டில் குறிப்பிட்ட செயல்திறனுடன் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் கூட கொரோனா பரவலை பெருமளவு குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த வீடியோவில் உள்ள குரங்கு இந்த ஆலோசனையை இதயத்திற்கு எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய வன வள திணைக்கள அதிகாரி சுசாந்தா நந்தா குரங்கு ஒன்றின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்,

அதில் தனது கூட்டத்துடன் இருக்கும் குரங்கு ஒன்று, கீழே துண்டை எடுத்து, தன் முகத்தை சுற்றி போட்டுக்கொண்டு மனிதர்களை போல் போட்டுக்கொண்டு சிறிது நேரம் சுற்றி வருகிறது.

குறித்த வீடியோ பார்ப்பவர்களை மகிழ்வித்துள்ளது.

"துண்டை நாம் முகக்கவசமாக பயன்படுத்துவதை பார்த்து குரங்கும் அப்படி செய்வதாக சுசந்தா நந்தா குறிப்பிட்டிருந்தார்.

தற்போது வரை காணொளி 38 ஆயிரம் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளதோடு மற்றும் மூவாயிரத்துக்கு 500 க்கும் மேற்பட்ட பயனர்களால் விரும்பப்பட்டது.

காணொளி; https://twitter.com/i/status/1280525018309390337

முக்கிய செய்திகள்

icon-left
icon-right