பிறந்து 25 நாட்களேயான பெண் குழந்தை கொரானாவுக்கு பலி - இந்தியாவில் சம்பவம்

Published By: Digital Desk 3

10 Jul, 2020 | 02:47 PM
image

இந்தியாவில் தமிழகத்தில் பிறந்து 25 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று கொரானாவுக்கு உயிரிழந்துள்ளது.

இந்தக் குழந்தைக்கு  ஏற்கனவே 3 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த குறித்த குழந்தை கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி சென்னை எழும்பூரில் உள்ள குழந்தை நல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

பின்பு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. அந்தக் குழந்தை நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இதனிடையே, கொரோனாவுக்கு இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 1,765 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,169 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 793,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 21,604 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17