மட்டக்களப்பு, கல்லடி பாலத்திலிருந்து கடலுக்குள் பாய்ந்து காணாமல்போன இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை சின்ன உப்போடை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன மட்டக்களப்பு, கூழாவடி பகுதியை சேர்ந்த கிஸோர் என்னும் 19 வயது இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லடி பழைய பாலம் அருகில் துவிச்சக்கர வண்டி ஒன்று அநாதரவாக இருந்ததையடுத்து, அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து குறித்த இளைஞனை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. மீனவர்களும் கடற்படையினரும் இணைந்து இந்த தேடுதலை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் இன்று காலை சின்னஉப்போடை கப்பலேந்திய மாதா ஆலயத்திற்கு அருகாமையில் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM