பொப் பாடகர் கொலை ; எத்தியோப்பியாவில் அரங்கேறும் வன்முறைகளால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Published By: Vishnu

08 Jul, 2020 | 05:18 PM
image

ஓரோமோ இனத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் எத்தியோப்பியாவில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இன வன்முறைகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது.

ஓரோமோ இனத்தைச் சேர்ந்த பொப் பாடகர் 'ஹாகலூ ஹுண்டீசா' எத்தியோப்பியாவில் கடந்த ஜூன் 29 ஆம் திகதி அடையாளம் தெரியாத தாக்குதல்தாரர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இதனால் எத்தியோப்பியாவில் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் இனப் பதற்றங்கள் தற்போது அதிகரித்துள்ளது. 

பிராந்தியத்தின் ஏற்பட்ட இந்த அமைதின்மை காரணமாக ஒன்பது பொலிஸ் அதிகாரிகள், ஐந்து போராளிகள் மற்றும் 215 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக ஓரோமியா பொலிஸ் ஆணையாளர் முஸ்தபா கெதிர் புதன்கிழமை அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

அத்துடன் இந்த வன்முறைகள் காரணமாக அரசு மற்றும் தனியார் துறையினரின் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34