மட்டக்களப்பு பாசிக்குடாவிலுள்ள ஆயுர்வேத சிகிச்சை நிலையம்(ஸ்பா) ஒன்றில் நேற்று இரவு (7) திடீரென ஏற்பட்ட தீயினால் குறித்த கட்டிடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையி்ல் குறித்த தீயினை கட்டுப்படத்தும் நடவடிக்கையில் மட்டக்களப்பு நகர சபை தீயனைப்பு படையினர் கல்குடா பொலிசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர்.
இதனால் தீயானது மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
மேற்குறித்த நிலையத்தில் தீ பரவியமைக்கான காரணம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அங்கிருந்த பெறுமதி மிக்க பொருட்கள் சில தீயில் எரிந்துள்ளன. இந்த தீ விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லையென பொலிசார் மேலும் தெரிவித்தனர். தீ பரவலை தொடர்ந்து பிரதேசத்தில் சற்று நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM