வடமாகாண மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்குரிய தருணமிதுவாகும் என்றுவடக்கு ஆளநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணத்திலுள்ள மாடுகள் வளர்ப்பு, மேய்ச்சல் நிலப்பற்றாக்குறை, மாடுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலொன்று வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்கள், மாகாணக் காணி ஆணையாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளைக் அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
வனத்துறை மற்றும் வன விலங்குத்துறைகளோடு இணைந்து மேய்ச்சல் நிலப்பரப்பினை விருத்திசெய்ய சம்மந்தப்பட்ட மாகாண அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாட்டுச்சந்தைகளை உருவாக்குவதன் மூலம் இடைத்தரகர்களையும் மோசடிகளையும் தவிர்த்து மாடுகளை வளர்ப்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.
வீதிகளிலும் தெருக்களிலும் மாடுகளை வளர்பதைத் தவிர்த்து தேவையான மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி கால்நடை வளர்ப்பை விரிவாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன் பாற்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு அதற்கான சந்தைப்படுத்துதலையும் விரிவுபடுத்தி மாகாண வளர்ச்சிக்கு ஒத்துழைப்புக்களை முன்னெடுப்பதற்குரிய செயற்பாடுகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்.
மேலும் இத்துறை சார்ந்த முதலீட்டாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசும் பிரதமரும் வட மாகாண வளர்ச்சித்திட்டங்களுக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்பையும் தருவதாக கூறியுள்ளனர்.
ஆகவே, எமது மாகாண மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களையும் வேலைகளையும் நாம் முன்னெடுக்க வேண்டிய தருணமிதுவாகவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM