உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் சபைக்கு முறையாக அறிவித்துள்ளதுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
நோய்த்தொற்று பரவல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் சரியான நேரத்தில் எச்சரிக்கவில்லை எனவும், சீனாவிற்கு ஆதரவாக அந்த அமைப்பு செயல்படுவதாகவும் அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியை நிறுத்திய ட்ரம்ப், அந்த அமைப்பில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதான அறிவிப்பு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸுக்கு திங்களன்று அனுப்பப்பட்டது, இது 2021 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி ஒரு வருடத்திற்குள் நடைமுறைக்கு வரும் என்று வெளியுறவுத்துறை மற்றும் ஐக்கிய நாடுகள் சபை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதான அறிவிப்பு மே மாத இறுதியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக சுகாதார ஸ்தாபனத்தில் அமெரிக்க பங்களிப்பை நிறுத்த உறுதி அளித்ததை உறுதிசெய்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM