மேலும் ஒரு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரி சி.ஐ.டி.யினரால் கைது!

Published By: Vishnu

08 Jul, 2020 | 03:38 PM
image

போதைப்பொருள் மோசடி செய்பவர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியத்தில் இணைக்கப்பட்ட மேலும் ஒரு அதிகாரியை சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் நேற்றிரவு ராகம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியேட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

போதைப் பொருள் மோசடிகளுக்கு உதவுவதன் மூலம், மில்லியன் கணக்கான வருமான ஈட்டிய குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் இணைக்கப்பட்ட அதிகாரிகள் குழு மீது சி.ஐ.டி.யினர் தற்போது சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக வெலிவேரிய பகுதியில் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் பேதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார என்பவர் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் ஆஜர் ஆகியிருந்தார்.

குறித்த நபர் தற்போது சி.ஐ.டி.யின் தடுப்புக் காவில் உள்ள நிலையில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் இணைக்கப்பட்ட 18 அதிகாரிகள் இதுவரை விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51