போதைப்பொருள் மோசடி செய்பவர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியத்தில் இணைக்கப்பட்ட மேலும் ஒரு அதிகாரியை சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் நேற்றிரவு ராகம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியேட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
போதைப் பொருள் மோசடிகளுக்கு உதவுவதன் மூலம், மில்லியன் கணக்கான வருமான ஈட்டிய குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் இணைக்கப்பட்ட அதிகாரிகள் குழு மீது சி.ஐ.டி.யினர் தற்போது சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னதாக வெலிவேரிய பகுதியில் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் பேதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார என்பவர் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் ஆஜர் ஆகியிருந்தார்.
குறித்த நபர் தற்போது சி.ஐ.டி.யின் தடுப்புக் காவில் உள்ள நிலையில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் இணைக்கப்பட்ட 18 அதிகாரிகள் இதுவரை விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM