மக்களிடத்தில் மாற்றம் வேண்டும் . மாற்றம் வந்தால் தான் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் அல்லது நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறிய கூட்டமைப்பு ஒரு போதும் இந்த இருபது வருடங்களுக்குள் தங்களுக்குள் ஒரு சரியான மாற்றத்தைக் கொண்டு வந்தார்களா? என வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான வைத்தியர் ஞானசீலன் குணசீலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சந்தர்ப்பமே கொடுக்கப்படாமல் சுமார் 20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களும் சாதிக்க மாட்டார்கள் என்று கூறுவது ஒரு நகைப்புக்குறிய விடயமாக இருக்கின்றது என்றார்.
உண்மையிலே கூட்டமைப்பு என்று ஒன்று இல்லை. தமிழரசுக் கட்சி தான் இருக்கின்றது. கூட்டமைப்பு என்கின்ற கட்சியை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட அந்த கட்சியை பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும் தமிழரசுக்கட்சியினால் முறியடிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், மக்கள் கட்டாயமாக இன்னொரு சந்தர்ப்பத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். எங்களுக்கு சாதிக்கக்கூடிய வகைகளில் அதிகாரத்தை பெற்று தர மக்கள் முன்வர வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM