அடையாளம் காட்ட உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை.!

Published By: Robert

05 Jul, 2016 | 09:23 AM
image

சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவைப் படுகொலை செய்தனர் என்று சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர்கள் இருவரின் மாதிரி வரைபடங்களை பொலிஸ் தலைமையலுவலகம் வெளியிட்டுள்ளது. 

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் சாட்சியாளர்களின் தகவல்களுக்கு அமைவாக பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவின் ஓவிய நிபுணர்களால் இந்த உருவங்கள் வரையப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவே இவ்வாறு அவர்களது உருவங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் இந்த உருவ அமைப்பை ஒத்தவர்களை காணுமிடத்து அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்குமாறும் பொது மக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் பொலிஸ் தலைமையலுவலகம் அறிவித்துள்ளது.

சாட்சியாளர்களின் தகவல்கள் பிரகாரம் வரையப்பட்டுள்ள முதலாவது சந்தேக நபர் 35 வயது மதிக்கத்தக்கவர்  எனவும், 5 அடி 8 அங்குலம் வரையிலான உயரம் கொண்டவர் எனவும் கண்கள் கபில நிறத்தை உடையன என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 

அத்துடன் அவர் வெள்ளைநிற கட்டுடலைக் கொண்டவர் எனவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சாட்சியங்களின் பிரகாரம் வரையப்பட்டுள்ள இரண்டாவது சந்தேக நபர் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். அவர் கறுப்பு நிற, பருமனான உடல் அமைப்பைக் கொண்டுள்ளதுடன் 5 அடி 10 அங்குலம் வரையிலான உயரம் கொண்டவர் என பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி குறித்த நபர்கள் தொடர்பில் எவரேனும் சரியான தகவல் ஒன்றினை அறிந்தால் அதனை உடனடியாக 0718591753,  0718591770 அல்லது  0773291500 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொதுமக்களிடம்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22