(நா.தனுஜா)
பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை விரைந்துவெளியிட வேண்டும்.
அது சுதந்திரமானதும், நியாயமானதும், பாதுகாப்பானதுமான தேர்தலை உறுதிசெய்வதற்கு மிகவும் அவசியமென்று என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,
பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் ஒருமாதகாலமே இருக்கும் சூழ்நிலையில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமலிருப்பதை உறுதிசெய்யும் வகையிலான விசேட நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் கடினமானதாகும்.
எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் தாமதம் காணப்படுவதாக முன்னணிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
இவ்விதிமுறைகள் வெளியிடப்படுவதை விரைவுபடுத்துவது சுதந்திரமானதும், நியாயமானதும், பாதுகாப்பானதுமான தேர்தலை உறுதிசெய்வதற்கு மிகவும் அவசியமானவையாகும்.
அதேபோன்று சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கு உரியவாறு சமூக இடைவெளி பின்பற்றப்படும் பாதுகாப்பான தேர்தல் பிரசாரங்கள் முக்கியமானவை.
அதேவேளை அனைத்துத் தரப்பினருக்கும் சமளவான வாய்ப்பை வழங்குவதை உறுதிசெய்வது ஊடகங்களின் கடமையாகும். சில ஊடக நிறுவனங்கள் பக்கச்சார்பாக செயற்படத்தொடங்கும் போது முழுக் கட்டமைப்புமே தளம்பலடைய ஆரம்பிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM