மறு அறிவித்தல் வரும்வரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு வெளியாட்கள் உட்செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சிறைக்கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதி உள்ளிட்ட 174 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவருக்கு இன்று காலை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில், குறித்த சிறைக்கைதி கந்தக்காட்டிலுள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM