வன்னி மாவட்டத்தில் பல இளைஞர்கள் , யுவதிகள் படித்து விட்டு வேலைவாய்ப்புக்களை நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருக்கையில் உங்களின் வாக்குக்களை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் வெளிமாவட்டங்களில் வசித்துவரும் அவர்களது உறவினர்கள் ஆதரவாளர்களுக்கு வன்னி மாவட்டத்தில் அரச தொழில்வாய்ப்புக்களை வழங்கிவருகின்றனர் .
இதனால் இங்குள்ள படித்த இளைஞர்கள் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றியும் தகுதியான வேலைவாய்ப்புக்கள் இன்றியும் வசித்து வருகின்றனர்.
இவ்வாறு நேற்று வவுனியா சிவபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது வன்னி மக்கள் காப்பகத்தின் தலைவரும் சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளருமான நீல் சாந்த தெரிவித்துள்ளார் .
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
நாங்கள் இங்கு கல்வித்திட்டங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது ஆரம்பப்பிரிவு முன்பள்ளி ஆசிரியர்களின் அடிமட்ட செயற்பாடுகளை மையப்படுத்தியும் கட்டியமைக்கும் பணிகளை செயற்படுத்தி வருகின்றோம். தேர்தலின் பின்னர் எனது சொந்த நிதியையும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டும் நிதியையும் சேர்த்துக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை அதிகமாக செய்து கொள்ள முயற்சித்துவருகின்றேன் .
இக்கலந்துரையாடலில் நீங்கள் கலந்து கொண்டபோதும் உங்களுடைய கிராம பொதுத் தேவைகளை முன்வைக்கவும் நீங்கள் எதிர்பார்த்து வந்துள்ளீர்கள் இங்குள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களையும் உங்களுடைய கிராமங்களின் தேவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கின்றோம் .
அத்தோடு, இங்குள்ள படித்த இளைஞர்கள் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் இன்றியும் படித்த வேலைக்கு தகுதியற்ற வேலைகளையும் செய்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM