மஸ்கெலியா நல்லதண்ணி மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதயில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்,மோகினி நீர்வீழ்ச்சியின் அருகில் ஏற்பட்டுள்ள மண் திட்டு சரிவில் கற்பாறைகள் காணப்படுவதால் நல்லத்தண்ணி மஸ்கெலியா போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் மறே மஸ்கெலியா போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் நல்லத்தண்ணி நகரில் இருந்து செல்லும் பயணிகள் மற்றும் மஸ்கெலியா நகரில் இருந்து செல்லும் பயணிகளின் போக்குவரத்து லக்சபான வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடன் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதையில் காணப்படும் கற்பாறை மற்றும் மண் திட்டை கனரக இயந்திரங்களின் உதவியுடன் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொண்டு வருவதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM