பாடசாலைகளை நடத்துதல் தொடர்பில் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தெடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் பாடசாலைகள் முகாமை செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் வழமையான கைவிரல் அடையாளமிடுதல், 7.30, இருந்து 3.30 வரை பாடசாலையில் இருத்தல் என்பன மத்திய கல்வி அமைச்சினால் கட்டாயமாக்கப்படவில்லை.
இதனை கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் தெளிவாக அறிவித்துள்ளார்.
இதனை வடக்கு மாகாணமும் பின்பற்ற வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடமாமாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் எடுத்துரைத்துரைத்தபோது வடக்கு மாகாணத்திலும் அதே சுற்று நிருபமே நடைமுறையில் உள்ளதெனவும் சில அதிபர்களே அதனை உதாசீனம் செய்து நடந்து கொள்கின்றனர். எனவும் வடமாகாணப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடந்துகொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
எனவே பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் நாடு முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM