கட்டுகஸ்தொட்ட – பெல்கொல்ல நீர்தேக்கத்தில் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரின் சடலமும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கண்டி, நவயாலதென்ன பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர்களாகிய இளைஞன் 17 வயதுடையவர் எனவும், யுவதி 16 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் 10 மற்றும் 11ஆம் வகுப்புக்களில் கல்வி கற்று வருவதுடன் காதல் விவகாரம் தொடர்பாக இந்த தற்கொலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரையும் நேற்றில் இருந்து காணவில்லை என அவர்களுடைய பெற்றோர் இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் நவயாலதென்ன ரயில் பாலத்திற்கு அருகில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பெற்றோர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து பெற்றோர் வருவதை அவதானித்த குறித்த இருவரும் மகாவெலி ஆற்றில் குதித்தாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM