பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன், வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 92.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி, புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ள மன்னர் மன்னன், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தலைவராக பல ஆண்டுகள் பொறுப்பிலிருந்து, அதற்கு சொந்த கட்டடம் கட்டித் தந்தார்.
தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.
வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றி இருந்த மன்னர் மன்னன், இன்று (6ம் திகதி) மதியம் 2.30 மணிக்கு காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு, புதுச்சேரி காந்தி நகரில் நாளை (7ம் திகதி) மாலை 4 மணிக்கு நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM