(எம்.ஆர்.எம்.வஸீம்)
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கூடும்போது சுகாதார பாதுகாப்பு முறையைப் பின்பற்றி பாராளுமன்ற அமர்வுகளை நடத்த கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்துக் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்க சுகாதார அமைச்சின் குழுவொன்றை பாராளுமன்றத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் விரைவில் பாராளுமன்றம் கூடவிருப்பதால், புதிய பாராளுமன்ற செயற்பாடுகளை சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பிரதி செயலாளர் நாயகமும், பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவெல மற்றும் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவிக்கையில்,
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இடம்பெறும் முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவு மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெறுவதால் அன்று சகலரும் சபையில் இருப்பது அவசியமாகின்றது. இதன் பின்னர் அடுத்த அமர்வு எவ்வாறு அமையவேண்டும் என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களே தீர்மானிக்க முடியும்.
இதற்கமைய முதலாவது பாராளுமன்ற அமர்விலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் சுகாதாரப் பாதுகாப்பான முறையில் செயற்படவேண்டும் என்பதால், சுகாதார அதிகாரிகளிடமிருந்து உரிய ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது அவசியமானது.
ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமூக இடைவெளியைப் பேணுவதற்கும், கைகளைக் கழுவுவதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், கூட்டங்கள் அனைத்தும் ஒன்லைன் முறையைப் பயன்படுத்தியே முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிடுகையில், இதுவரையில் நாட்டுக்குள் கொவிட் வைரஸ் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளபோதும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் நபர்களின் ஊடாக வைரஸ் பரவக்கூடிய ஆபத்து இருப்பதால் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.
எனவே, எதிர்வரும் நாட்களில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்ஷ்மன் கம்லத் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்து சபை மண்டபம், குழு அறைகள், உணவுச் சாலை உள்ளிட்ட ஏனைய பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் உரிய சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இதன்போது கொவிட் 19 சூழலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் உள்ளடக்கிய புத்தகங்களும் பாராளுமன்றத்துக்குக் கையளிக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM