அமெரிக்காவில் இடாஹோ மாநிலத்திலுள்ள ஏரிக்கு மேலாக, இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில், 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
இடாஹோவில் உள்ள கோயூர் டி அலீன் ஏரிக்கு மேலாக இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதன் பின்னர் நீரில் மூழ்கியுள்ளது.
குறித்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் இறந்த இருவர் நீரில் மூழ்குவதற்கு முன்னர் விமானத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள மீதமுள்ள ஆறு பேரின் நிலைக் குறித்து இன்னமும் தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றபோதும், அவர்களும் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரியவர்கள், குழந்தைகள் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் குறித்த விபத்துக்கான காரணம் மற்றும் விமானத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பது இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
மேலும், விமானங்கள் நீரிருக்குள் 127 அடி ஆழத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகிய இரண்டும் இந்த மோதல் குறித்து விசாரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM