ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள ’கிரீன் சோன்’ பகுதியை நோக்கி
ரொக்கெட் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ரொக்கெட் தாக்குதலில் ஒரு குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளதோடு, ஒரு குழந்தை காயமடைந்துள்ளதாக ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.
தூதரகத்திற்கு அண்மையில் நிறுவப்பட்ட சி-ரேம் வான் பாதுகாப்பு அமைப்பு ரொக்கெட்டை இடைமறிக்க முயற்சித்திருக்கலாம் என்று ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் இருந்து ஏவுகணை பாய்ந்து சென்று தூதரகம் நோக்கி சென்று கொண்டிருந்த ரொக்கெட்டை நடு வானில் தாக்கி அழித்தது.
அண்மையில் ரொக்கெட் தாக்குதல்கள் அமெரிக்க தூதரகத்திற்கு நெருக்கமாக வந்து ஈராக்கிய தளங்களில் அமெரிக்க துருப்புக்களை குறிவைத்துள்ளன.
ஈராக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ரொக்கெட்டை தாக்கி அழித்ததால் அமெரிக்க தூதரம் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
பாக்தாத்தின் அலி அல்-சலே பகுதியில் இருந்து இந்த ரொக்கெட் ஏவப்பட்டு சனிக்கிழமை பிற்பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டின் அருகே தரையிறங்கிய நிலையில் ,ஒரு குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதோடு வீடு சேதமடைந்துள்ளதாக இராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM