வாகன விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டீஸ் நாளைய தினம் பாணந்துரை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய காலி வீதி - ஹொரேதுட்டுவ பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கார் ஒன்று பாதசாரதி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது மொரட்டுவ பகுதியிலிருந்து பாணந்துறை நோக்கிச் சென்ற கார் பாதசாரதி மீது மோதியுள்ளதுடன் , படுகாமடைந்த பாதசாரதி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் , விபத்து தொடர்பில் காரின் சாரதியான கிரிக்கட் வீரர் குசல் மெண்டீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குசல் மெண்டீஸ் விபத்து ஏற்படும் போது மதுபோதையில் இருந்துள்ளாரா ? என்பதை கண்டறிவதற்காக அவரது இரத்தமாரிகள் பரிசோதிக்கப்பட்டதுடன் , பின்னர் பொலிஸார் அவரை இவ்வாறு கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM