(செ.தேன்மொழி)
திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டுவருகின்றனர்.
இதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத ஆயுதங்கள், போதைப் பொருட்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும், பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்றசெயல்களில் தொடர்புடைய 2,350 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்போது போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 502 சந்தேக நபர்களுள், 258 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 170 கிராம் 995 மில்லிகிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா போதைப் பொருளுடன் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 813 கிராம் 933 மில்லி கிராம் கஞ்சா பறிமுதல் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடன் 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரிடமிருந்து 6 கிராம் 480 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 517 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 5,422 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 3 ரிபீடர் ரக துப்பாக்கிகளும், கைத்துப்பாக்கி மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு இணங்க கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று நள்ளிரவு வரை 2,350 சந்தேக நபர்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM