மத்திய தரைக் கடலில் மீட்கப்பட்ட 180 புலம்பெயர்ந்தோரை சிசிலியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்கு மாற்றும் நோக்கில் இத்தாலி சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அந் நாட்டு உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
180 புலம்பெயர்ந்தோரும் ஒரு வாரத்திற்கும் மேலாக 'SOS' என்ற தொண்டு நிறுவனம் ஒன்றினால் இயக்கப்படும் ஓஷன் வைக்கிங் என்ற கப்பலில் மத்திய தரைக்கடலில் சிக்கியுள்ளனர்.
குறித்த கப்பலில் சண்டைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் ஆகியவை வெள்ளிக்கிழமை அவசரகால நிலையை அறிவிக்க SOS தொண்டு நிறுவனத்தை தூண்டின.
இந் நிலையில் ஓஷன் வைக்கிங் கப்பலுக்கு இத்தாலியின் சிசிலியின் போசல்லோ அதிகாரிகள் அனுப்பிய மருத்துவக் குழு, கப்பலில் பதிவு செய்யப்பட்ட பதட்டங்களை நீக்கி வருவதுடன், சுகாதார பிரச்சினைகள் இல்லாததையும் கண்டறிருந்து வருகின்றது.
அத்துடன் COVID-19 வைரஸிற்கான புலம்பெயர்ந்தோரை மருத்துவக் குழு பரிசோதித்து வருவதுடன் அதன் பிறகு அவர்கள் தற்போது போர்டோ எம்பெடோக்கிள் மற்றும் சிசிலியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.
"ஜூலை 6 திங்கட்கிழமை மொபி ஜாசா கப்பலில் திட்டமிடப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரின் பரிமாற்றத்தைக் கருத்தில் கொண்டு நிலைமை கவனமாக கண்காணிக்கப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் 25 குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உள்ளடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Photo Credit : euronews, aljazeera
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM