மத்தியதரைக் கடலில் மீட்கப்பட்ட 180 புலம்பெயர்ந்தோரை அழைத்துச் செல்ல இத்தாலி நடவடிக்கை!

Published By: Vishnu

05 Jul, 2020 | 03:37 PM
image

மத்திய தரைக் கடலில் மீட்கப்பட்ட 180 புலம்பெயர்ந்தோரை சிசிலியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்கு மாற்றும் நோக்கில் இத்தாலி சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அந் நாட்டு உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது. 

180 புலம்பெயர்ந்தோரும் ஒரு வாரத்திற்கும் மேலாக 'SOS' என்ற தொண்டு நிறுவனம் ஒன்றினால் இயக்கப்படும் ஓஷன் வைக்கிங் என்ற கப்பலில் மத்திய தரைக்கடலில் சிக்கியுள்ளனர்.

குறித்த கப்பலில் சண்டைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் ஆகியவை வெள்ளிக்கிழமை அவசரகால நிலையை அறிவிக்க SOS தொண்டு நிறுவனத்தை தூண்டின.

இந் நிலையில் ஓஷன் வைக்கிங் கப்பலுக்கு இத்தாலியின் சிசிலியின் போசல்லோ அதிகாரிகள் அனுப்பிய மருத்துவக் குழு, கப்பலில் பதிவு செய்யப்பட்ட பதட்டங்களை நீக்கி வருவதுடன், சுகாதார பிரச்சினைகள் இல்லாததையும் கண்டறிருந்து வருகின்றது. 

அத்துடன் COVID-19 வைரஸிற்கான புலம்பெயர்ந்தோரை மருத்துவக் குழு பரிசோதித்து வருவதுடன் அதன் பிறகு அவர்கள் தற்போது போர்டோ எம்பெடோக்கிள் மற்றும் சிசிலியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. 

"ஜூலை 6 திங்கட்கிழமை மொபி ஜாசா கப்பலில் திட்டமிடப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரின் பரிமாற்றத்தைக் கருத்தில் கொண்டு நிலைமை கவனமாக கண்காணிக்கப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் 25 குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உள்ளடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Photo Credit : euronews, aljazeera

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47