ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வயல் கிணறு ஒன்றிலிருந்து குடும்பத்தலைவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தூர் நிலாவரைக் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் தர்மசீலன் (வயது- 37) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை தோட்டத்துக்குச் சென்ற குறித்த நபர், நீர் இறைப்பதற்கான ஆயத்த வேலைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது மண்வெட்டி தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது. இதன்போதே அதனை எடுக்க முற்பட்ட போது அவர் கிணற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர் .
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM