மூவின மக்களுக்கும் சமமான முறையில் சேவைகளை வழங்குவேன் - கிண்ணியாவில் சஜித் 

Published By: Digital Desk 4

05 Jul, 2020 | 11:38 AM
image

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணித்து மக்களுக்கு கையளிப்பேன் எதிர் வரும் ஆகஸ்ட் ஐந்துக்கு பிறகு இதனை செய்து தருவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பொதுக் கூட்டத்தின் போது இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

திருகோணமலை மக்களை நான் நன்கு அறிவேன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மூதூர் தொகுதி மக்கள் தேசிய ரீதியிலும் பார்க்க அமோக வாக்குகளை எனக்களித்தீர்கள் இம் முறையும் அதே போன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்துங்கள்.

சகல விதமான பிரச்சினைகள் இங்கு உள்ளது இன மதவாதமற்ற சேவையை மூவின மக்களுக்கும் சமமான முறையில் செய்து காட்டுவேன்.

மீனவர்கள் பிரச்சினை, விவசாய நிலங்கள் தொடர்பிலும் பல சாதகமான முறையில் சேவைகளை செய்வதற்காக எண்ணியுள்ளேன். இந்த நாட்டில் சிறுபான்மை என்று ஒன்றில்லை எல்லோரும் சமமாக வாழ வழிவகுக்க இந்த நாளில் எனது சக்தி ஊடாக முன்னெடுக்க காத்திருக்கிறேன்.

வேலையில்லா பட்டதாரிகளின் நியமனங்கள் இந்த அரசாங்கத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ளது ஆகஸ்டுக்கு பின்னர் வெற்றியுடன் பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவோம் ரணசிங்க பிரேமதாச செய்த ஆட்சியை போன்று அவரின் மகனான சஜீத் பிரேமதாச வாகிய நான் மூவின மக்களுக்கும் சமமான முறையில் சேவைகளை வழங்குவேன் எனது அப்பாவின் காலத்தில் கலாசார அமைச்சர் உட்பட தகம்பாசல போன்றன அமையப் பெற்றது.

முஸ்லிம்களின் கலாசார ரீதியான பாதிப்பற்ற நடவடிக்கைகளை இந்த நாட்டில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை திறம்பட செய்து காட்டுவேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27