வவுனியா டிப்போவில் 400 லீற்றர் டீசல் திருட்டு - புலனாய்வுத்துறையினர் விசாரணை

Published By: Digital Desk 4

03 Jul, 2020 | 05:35 PM
image

வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் நேற்று முன்தினம் 400 லீற்றர் டிசல் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து பொலிஸ் நிலையத்தில் சாலை முகாமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிசார் மற்றும் புலனாய்வுத்துறையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சாலை முகாமையாளர் ஷாகீர் தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

கடந்த கொரோனா தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் நாடாளாவிய ரீதியாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு நாட்டில் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் பஸ்களுக்கு டிசல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுநேற்று முன்தினம் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொலிசார் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

கடந்த இரண்டு தினங்களாக இ.போ.ச பஸ்கள்  உள்ளூர் சேவைகள் மேற்கொள்ளப்படவில்லை இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கிவருவதாகவும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், யுவதிகள் இதனால் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இவ்விடயம் குறித்து சாலை முகாமையாளர் தெரிவிக்கும்போது, நிதி மோசடியில் ஈடுபட்ட நடத்துனர்கள் , சாரதிகள் சிலர் சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர் அவர்களின் சேவைகளுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 

அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றிற்கு செல்வதற்கு பல சாரதிகள் நடத்துனர்கள் நேற்று முன்தினம் விடுமுறை பெற்று சென்ற காரணத்தினால் உள்ளூர் பேருந்து சேவைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58