வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் நேற்று முன்தினம் 400 லீற்றர் டிசல் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து பொலிஸ் நிலையத்தில் சாலை முகாமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசார் மற்றும் புலனாய்வுத்துறையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சாலை முகாமையாளர் ஷாகீர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த கொரோனா தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் நாடாளாவிய ரீதியாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு நாட்டில் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் பஸ்களுக்கு டிசல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுநேற்று முன்தினம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொலிசார் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
கடந்த இரண்டு தினங்களாக இ.போ.ச பஸ்கள் உள்ளூர் சேவைகள் மேற்கொள்ளப்படவில்லை இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கிவருவதாகவும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், யுவதிகள் இதனால் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து சாலை முகாமையாளர் தெரிவிக்கும்போது, நிதி மோசடியில் ஈடுபட்ட நடத்துனர்கள் , சாரதிகள் சிலர் சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர் அவர்களின் சேவைகளுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றிற்கு செல்வதற்கு பல சாரதிகள் நடத்துனர்கள் நேற்று முன்தினம் விடுமுறை பெற்று சென்ற காரணத்தினால் உள்ளூர் பேருந்து சேவைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM