கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பான விசாரணைக்கு கிரிக்கெட் வீரர்கள் அழைக்கப்படமாட்டார்கள் என விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜகத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதுவரை வரவழைக்கப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களின் அறிக்கைகள் உண்மையானவை என்றும், போட்டியின் போது அணியில் மாற்றம் ஏற்படுவதற்கான நடைமுறை காரணத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இது 2011 இல் நிகழ்ந்த ஒரு சம்பவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்ததானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்தை தொரடர்ந்து விளையாட்டு அமைச்சசு குறித்த விசாரணையைத் தொடங்கியது.
இது தொடர்பாக முன்னாள் தலைவர்களான மகேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க, அப்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது
விசாரணை தொடர்பான அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைப்பதாக எஸ்.எஸ்.பி ஜகத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
இன்று காலை நடைபெற்ற சிறப்பு புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
பல்வேறு கிரிக்கெட் வீரர்களை வாக்குமூலம் பதிவு செய்ய அழைப்பது நாட்டில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இது ஒரு பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றும் ஜகத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
"இதுவரை பதிவு செய்யப்பட்ட மூன்று வாக்கு மூலங்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எழுப்பிய 14 குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதைக் காட்டுகிறது.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் பதிலளிக்கவில்லை. இது எந்த விசாரணையையும் கூட ஆரம்பிக்கவில்லை ’என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM