துணுக்காய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதிக்கு ஆடு மேய்ப்பதற்கு சென்ற இளைஞன் மீது இராணுவ சீருடையில் நின்றோர் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இளைஞன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து மேலும் உறவினர்கள் தெரிவிக்கையில் ,
நேற்று முன்தினம் மாந்தை பிரிவிற்குட்பட்ட பொன்நகர் ஒட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் காட்டுப்பகுதிக்கு காலை ஆடு மேய்ப்பதற்குச் சென்றபோது, இராணுவ சீருடைதரித்தோர் தாக்கி காயப்படுத்தியுள்ளர்கள்.
இந்நிலையில்,வீட்டிலுள்ளவர்களுக்கு தகவல் வழங்குவதற்கு முற்பட்ட இளைஞன் மீது கடுமையாகத்தாக்கியுள்ளதோடு, இளைஞனின் கைத்தொலைபேசி தாக்கியோரால் எடுத்துச் செல்லப்பட்டு இரவு ஏழு மணியளவில் மாங்குளம் வன இலகா உத்தியோகத்தர்களிடம் குறித்த இளைஞன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து உறவினருக்கு தகவல் வழங்கப்பட்டு முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதையடுத்து நேற்று இரவு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆலங்குளம் எருவில் பகுதியிலுள்ள படையினரே தன்மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் சிறுவன் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆடுகள் காணாமல் போயுள்ளதாக துணுக்காய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM