ஐரோப்பிய கால்பந்து அரை இறுதியில் ஜேர்மனுடன் மோத போகும் பிரான்ஸ்

Published By: Raam

04 Jul, 2016 | 12:41 PM
image

15 ஆவது ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வருகின்ற இப்போட்டி காலிறுதி போட்டிகள் இன்று காலையுடன் முடிவடைந்தது.

காலிறுதியில் பிரான்ஸ் மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையில் நடைப்பெற்ற போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி இலகுவாக வெற்றது.

போர்டியக்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய 3ஆவது கால் இறுதியில் உலக சாம்பியன் ஜேர்மனியும், முன்னாள் சாம்பியன் இத்தாலியும் மோதின.

விறுவிறுப்பாக நடந்த இப்போடியில் முதல் பகுதியிலும், இரு அணிகளாலும் கோல்கள் பெறமுடியாவில்லை.ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஜேர்மனி அணியின் மெசட் ஒசில் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் அந்த முன்னிலை சிறிது நேரமே நீடித்தது. 78-வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு கிடைத்த பெனால்டி ஷூட் வாய்ப்பை பயன்படுத்தி லியனார்டோ போனுகி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரு அணி வீரர்களும் தீவிரமாக முயன்றனர். இரு அணிகளின் கோல்கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டதால் மேற்கொண்டு யாராலும் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர இறுதியில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதிலும் வெற்றியாளரைத் தீர்மானிப்பது கடினமாக இருந்தது. வழக்கமாக இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அதில் அதிக கோல் அடிப்பவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆட்டத்தில் 5 பெனால்டி ஷூட் அவுட்களின் இறுதியிலும் வெற்றியாளரை தீர்மானிக்க முடியவில்லை.

ஜெர்மனி அணியில் புகழ்பெற்ற வீரர்களான ஒசில், தாமஸ் முல்லர், ஸ்க்வீன்ஸ்டிகர் ஆகியோரும், இத்தாலி அணியில் சிமோன் சாசா, கிராசியானோ பெல்லே, போனுக்கி ஆகியோரும் பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடிக்கத் தவறினர். இதனால் தலா 8 பெனால்டி ஷூட் வாய்ப்புகளுக்கு பிறகு இரு அணிகளும் 5-5 என்று சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் 9-வது பெனால்டி ஷூட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தாலி வீரரான டார்மியான், இந்த வாய்ப்பை தவறவிட ஜேர்மனியின் ஹெக்டர் கோல் அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்தார்.

முடிவில் ஜெர்மனி அணி 6–5 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வெளியேற்றி 9 ஆவது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. ஜேர்மனி கோல் கீப்பர் மானுவல் நீயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அணிகள் வருகின்ற வெள்ளிக்கிழமை அரையிறுதியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41