வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழா வின் சிறப்பு வாய்ந்த திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்றையதினம்(01) மிகவும் சிறப்புற இடம்பெற்றது.
கொரோனா தொற்று சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக சமூக இடைவெளிகளை பேணி சுகாதார பகுதியினரின் கண்காணிப்புக்கு மத்தியில் இந்த உற்சவம் சிறப்புற இடம்பெற்றது.
பாரம்பரியமாக வேட்டை திருவிழா இடம்பெறும் பகுதியிலிருந்து ஆரம்பித்த வேட்டை ஆடல் நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது.இந்த வேட்டை திருவிழாவில் வாகை குழைகளை அணிந்து வேடுவர் வேடம் தரித்து அடியவர்கள் தமது நேர்த்திகடன்களை நிறைவேற்றினர்.
இலங்கையில் தானாக தோன்றிய ஆலயமான இந்த ஆலயத்தில் இடம்பெறும் மஹோற்சவத்தில் வேட்டைத்திருவிழா மிகவும் பிரசித்தமானது. எந்தவொரு ஆலயங்களிலும் இடம்பெறாதவகையில் இங்கே வேட்டைத்திருவிழா சிறப்பாக இடம்பெறுவது சிறப்பம்சமாகும்.
படத் தொகுப்பு
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத்திருவிழா சிறப்புற இடம்பெற்றது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM