சிவில் நிர்வாகப் பிரிவுகளில் இராணுவ பிரசன்னம் : சர்வாதிகார போக்கிற்கு வழிவகுத்துள்ளது

Published By: J.G.Stephan

01 Jul, 2020 | 05:05 PM
image

(செ.தேன்மொழி)

அரச ஊழியர்களின் மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம் , சிவில் நிர்வாகப் பிரிவுகளில் இராணுவத்தினரை நியமித்து சர்வாதிகார போக்குக்கு வழியமைத்து வருகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றஞ்சாட்டினார்.

மேலும் கூறியதாவது, அரசாங்கம் அரச நிர்வாகப் பிரிவுகளில் ஓய்வுப் பெற்ற இராணுவத்தினரை நியமித்து அரச ஊழியர்களின் மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரச நிர்வாகப்பிரிவுகள் அனைத்திலும் இராணுவத்தினரை நியமிப்பதானது சர்வாதிகார போக்குக்கான ஏற்பாடாகவே விளங்குகின்றது. 

2015 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அரச ஊழியர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அரச ஊழியர்களின் நலனுக்காக பல சேவைகளை நாங்கள் செய்திருந்தோம். சம்பள பிரச்சினை மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான சிக்கல்கள் அனைத்துக்கும் தீர்வுக் கண்டிருந்தோம். இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அறவிட்டு வருகின்றது.

அரசாங்கம் பொதுத் தேர்தலை வெற்றிக் கொள்ளும் எண்ணத்தில் , கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்கு  வழங்குவதாக தெரிவித்த ஒரு இலட்சம் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கப் போவதாக தெரிவித்து வருகின்றது. தேர்தல் சட்ட விதிகள் அமுல்படுத்தப்பட்டு நிலையில் இவ்வாறான நியமனங்கள் அந்த சட்டவிதிகளுக்கு புறம்பானவையாகவே கருதப்படும். இதேவேளை அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறிக் கொண்டே அரச ஊழியர்களின் சம்பளத்தை அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இவ்வாறான நிலையில் இந்த நியமனங்களை வழங்கினால் அவர்களுக்கு எவ்வாறு அரசாங்கம் ஊதியத்தை வழங்கும்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் , மத்தியவங்கி பிணைமுறிகள் மோசடி என்பவற்றை காண்பித்தே ஜனாதிபதி கோத்தாபயவின் அரசாங்கம் வெற்றிப் பெற்றது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மேற்படி மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த எட்டு மாத காலத்தில் ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய பிரதான நபரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னியுடனே இணைந்து செய்யற்பட்டு வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27