பாகிஸ்தான் இராணுவம் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரியை லெப்டினன்ட் ஜெனரலாக நியமித்துள்ளதாக அந்நாட்டு இராணுவத்தின் ஊடக பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தில் ஏற்கனவே மேஜர் ஜெனரலாக பதவிவகித்த பெண் அதிகாரியான நிகர் ஜோஹர் நேற்றைய தினம் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, மூன்று நட்சத்திர ஜெனரலின் பதவியைப் பெற்ற மேஜர் ஜெனரல் நிகர் ஜோஹர், பாகிஸ்தான் இராணுவத்தின் முதல் பெண் அறுவை சிகிச்சை தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் தந்தை மற்றும் கணவர் என இருவரும் இராணுவத்தில் பணியாற்றியுள்ள நிலையில், ஜோஹர் 1985 ஆம் ஆண்டில் ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று பாக் இராணுவத்தின் மருத்துவப் படையில் சேர்ந்துள்ளார்.
இதனையடுத்து 2017 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவியை அடைந்த மூன்றாவது பெண் அதிகாரியானார்.
இதற்கு முன்பாக பாக் இராணுவத்தில், ஷாஹிதா பாட்ஷா மற்றும் ஷாஹிதா மாலிக் ஆகிய இரண்டு பெண்கள் முக்கிய தளபதிகளாக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM