கொழும்பின் வடபகுதியில் பல இடங்களிலும் வடிகான்கள் துப்புரவு செய்யப்படாமையால் நுளம்புகள் பெருகும் அபாயமுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கொழும்பு வடக்கு காக்கைதீவு பகுதியில் வடிகான்கள் துப்புரவு செய்யப்படாத நிலை காணப்படுவதாகவும் இதனால் நுளம்புகள் பெருகுவதால் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் டெங்கு நுளம்புகள் பரவுவதை கண்காணிக்க அதிகாரிகள் வருவதாகவும் நுளம்புபெருகுவதை கட்டுப்படுத்த மருந்துகளை விசிறிவிட்டு செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் குறித்த வடிகான்களில் கழிவுநீர்கள் தேங்கியுள்ள நிலையில் அதனை துப்புரவு செய்வதற்கு எந்தவொரு அதிகாரிகளும் முன்வரவில்லையென்றும் தாம் அதனை துப்புரவு செய்தாலும் அது பலனளிக்கவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்நிலையில், கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விழிப்புடனும் தமது சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்றும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர். விஜேமுனி தெரிவித்திருந்தார்.
குளிர்சாதனப் பெட்டியிலுள்ள தட்டுகளில் நுளம்புகள் முட்டையிட்டு பெருக்கம் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை சுத்தமாக வைத்திருக்குமாறும் டெங்கு நுளம்புகள் அதிகம் பரவும் இடங்களாக கிருலப்பணை, கிருள வீதி, பாமன்கடை, நாரஹேன்பிட்டி,வெள்ளவத்தை, மிலாகிரிய, முகத்துவாரம், வனாத்தமுல்ல, தெமட்டகொடை போன்ற பல பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநாகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் விஜேமுனி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகளுக்கு http://www.virakesari.lk/article/8187
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM