மாலைதீவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமைபோன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என மலைதீவுக்கான உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மலைதீவு உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு சேற்றுக்காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது, கொவிட் 19 தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருநு்த மாலைதீவு எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில், மாலைதீவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமைபோன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் தெரிவித்தார்.
மாலைதீவில் உள்ள இலங்கையர்களின் தகவல் தொடர்பில் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
வெளிவிவகார அமைச்சின் தகவலுக்கமைய இலங்கை பணியாளர்கள் 15000 - 20000 க்கும் இடையிலானோர் மாலைதீவில் பணியாற்றுவதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
மாலைதீவினை மீண்டும் திறப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், அந்நாட்டு சுற்றுலாத்துறையை மீண்டும் வழமைக்குத் திரும்பும் என மேலும் தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM