இலங்கையின் அபிவிருத்திக்கும் அதன் இறைமைக்கும்க்குமான ஆதரவை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடும் போது மேற்கண்டவாறு அமெரிக்காவின் மீள் உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் தொடர்பில் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மோர்கன் ஓர்டகஸ்,
கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான அபிவிருத்திக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு அமெரிக்காவின் கொவிட் 19 ற்கான தொடர்ச்சியான உதவிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இதுவரை அமெரிக்கா இலங்கைக்கு சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை இதுவரை செய்துள்ளது.
மேலும் மனிதாபிமான மற்றும் சுகாதார விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால ஒத்துழைப்பு குறித்தும் இரு நாடுகளின் தலைவர்களும் மீளாய்வு செய்தனர்.
பகிரப்பட்ட ஜனநாயக மரபுகள்,மனித உரிமைகளுக்கான மதிப்பு, மக்களின் நீண்டகால ஸ்திரத்தன்மை, செழிப்புக்கான நீண்டகால வெளிப்படைத்தன்மையின் முக்கியத்தும் குறித்து இருவரும் பேசியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மோர்கன் ஓர்டகஸ் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM