அரசாங்கம் ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதிக்கின்றது - சஜித்

Published By: Digital Desk 3

29 Jun, 2020 | 08:32 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பிரதமர் உட்பட  அரசாங்கம் கருணா அம்மானின் கூற்றை சாதாரண விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம்  ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதித்திருக்கின்றது.

அடுத்து நாங்கள் அமைக்கும் புதிய அரசாங்கத்தில் கருணா அம்மானை சட்டத்துக்கு முன் கொண்டுவருவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பிரதமர் மக்களை விழித்து நீண்டதொரு உரையில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க தேவையான எந்த வேலைத்திட்டமும் அவரின் உரையில் இல்லை.

மாறாக எமது இராணுவ வீரர்கள் 3ஆயிரம் பேரை கொலை செய்ததாக பகிரங்கமாக தெரிவிக்கும் கருணா அம்மானை சுத்தப்படுத்துவதற்கே அவர் அந்த நீண்ட உரையை மேற்கொண்டுள்ளார்.

மேலும் கருணா பகிரங்கமாக தெரிவித்த விடயத்தின் பாரதூரம் நாட்டின் பிரதமருக்கு புரிவதில்லையா என கேட்கின்றோம். கருணா தனது உரையில்,  தேர்தலில் போட்டியிவேண்டாம் என்றும் எமது தேசிய பட்டியலில் சந்தர்ப்பம் வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்ததாக குறிப்பிடுகின்றார். 

எனவே பிரதமர் உட்பட இந்த அரசாங்கம் கருணா அம்மானின் கூற்றை சாதாரண விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம் எமது ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதித்திருக்கின்றது. அதனால் அடுத்து நாங்கள் அமைக்கும் புதிய அரசாங்கத்தில் கருணா அம்மானை சட்டத்துக்கு முன் கொண்டுவருவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33