ஹோமாகம பிட்டிபன பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 12 ரி - 56 ரக துப்பாக்கிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதாள உலகு குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் இவ்வாறு 12 துப்பாக்கிகளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமையவே குறித்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும், மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 729 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாணத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணி முதல் மாலை 07 மணி வரை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM