(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கும், அமெரிக்காவுக்கும் அறிவிக்க வேண்டும். லலித ஸ்ரீ குணருவன் சமர்பித்துள்ள அறிக்கை பெறுமதியற்றது என்றே குறிப்பிட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சேதவத்த விகாரையில் மதவழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எம். சி. சி. ஒப்பந்தம் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. ஒப்பந்தத்தின் முதலிரண்டு பகுதிகளும் 2017. மற்றும் 2018ம் ஆண்டுகளில் கைச்சாத்திடப்பட்டு அதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முதற்கட்டமாக கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளதை தவறானதாகும்.
எம். சி. சி ஒப்பந்தத்தை தொடர்புப்படுத்தி எவ்வித நிதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமெரிக்க தூதரம் நிராகரித்துள்ளது. எவ்வித நிதியும் கிடைக்காதபோது எவ்வாறு நிதி மோசடி செய்வது.
ஒப்பந்தம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட லலித ஸ்ரீ குணருவன் சமர்ப்பித்துள்ள அறிக்கை பெறுமதியற்றது. என்றே குறிப்பிட வேண்டும் ஆகவே ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை ஆகவே அரசாங்கம் மக்களுக்கும், அமெரிக்காவுக்கும் உண்மை நிலையினை அறிவிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM