கொரோனா பாதிப்பு காரணமாக ,இந்திய தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளரான வேல்முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் ஊடகவியலாளர் இவர்.
தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
இவர் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பத்திரிகையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று சென்னையில் கால் பதித்ததுமே முன்களப் பணியாளர்கள் பலருடன் ஏராளமான பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் பலர் நலன் பெற்று வீடு திரும்பினர்.
தமிழகத்தில் நேற்று 3645 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை 74,622 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 46 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 957 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM