(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியிலுள்ள ஆரம்ப பாடசாலைகளை சுகாதார ஆலோசனைகளுடன் வரையறுக்கப்பட்டளவில் திறப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் போது அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு முழுமையாக திறக்கப்பட்டு 45 நாட்கள் கடந்துள்ளன. நாடு திறக்கப்பட்டதோடு ஆரம்ப பாடசாலைகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பெரும்பாலான பெற்றோரால் எம்மிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பில் தீர்மானிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அதற்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள ஆரம்ப பாடசாலைகளை வரையறுக்கப்பட்டளவில் திறப்பதற்கு எதிர்வரும் நாட்களில் வாய்ப்பளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கு அமையவே இந்த தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி அனைத்து பாடசாலைகள் , ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM