வவுனியா ஓமந்தை பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து இன்று (26.06.2020) பிற்பகல் 1 கிலோ 707 கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பிராந்திய மது ஒழிப்புபிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓமந்தை பறநாட்டகல் குளப் பகுதியில் சென்ற இளைஞன் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவரது உடமையிலிருந்து 1 கிலோ 707 கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.
வன்னி பிரதிபொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் டி.என். மாரசிங்கவின் வழிகாட்டலில், பொலிஸ் சார்ஜன்ட் நிமால்(60064), கான்ஸ்டபிள்களான பிரசாந்தன் (91000), லலித் (85061) ஆகியோர் உடங்கிய குழுவே குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
ஓமந்தை பறநாட்டங்கல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனை கைது செய்த வவுனியா பிராந்திய மது ஒழிப்புபிரிவு பொலிஸார் ஓமந்தை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM