வியாழன் கோளின் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்றான யூரோபாவில் உள்ள கடல் மேற்பரப்பில் உறைந்த நிலையில் நீர் இருப்பதால், அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆய்வகமொன்றின் விஞ்ஞானிகள், நீர் கொண்ட தாதுக்களை உடைப்பதன் மூலம் இந்த கடல் உருவாகியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
யூரோபாவில் உருமாற்றத்தால் கடல் போன்று உருவாகியிருக்கலாம். வெப்பம், அழுத்தம் அல்லது பிற இயற்கை நிகழ்வுகளால் பாறைகளின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாமென ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2016 இல் அதன் மேற்பரப்பில் நீராவி புகை வெளியேறியதற்கான ஆதாரம் இருந்ததை கண்டறிந்திருந்தனர்.
வெப்பமயமாதல், அதிக அழுத்தம் ஆகியவற்றால் இயற்கையான கதிரியக்கம் அல்லது வியாழன் கோளின் ஈர்ப்பு விசையால் உருவாகும் அலை போன்றவற்றால், நீர் தாதுக்களில் இருக்கும் தண்ணீர் வெளியேறி இருக்கலாமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த கடல் உயிர்கள் வாழக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ள விஞ்ஞானியொருவர்,
நாசாவின் யூரோபா கிளிப்பர் திட்டம், அடுத்த சில ஆண்டுகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே எங்கள் பணி, யூரோபாவின் வாழ்விடத்தை ஆராயும் இந்த திட்டத்துக்கு தயாராகும் நோக்கத்தில் உள்ளது, என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM