(ஆர்.விதுஷா)
தொழிலின்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பு, விவசாய போராட்ட இயக்கம், செயற்றிட்ட உதவியாளர் ஒன்றியம் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களை சேர்ந்த 50 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
வேலையில்லாப்பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பைப்பெற்றுக்கொடு , அதிகாரமுடையோரே மத்திய கிழக்கில் பணியாற்றுபவர்களின் உயிர் ஆபத்தில் உடனே தலையிடு , தனியார் துறை தொழில் மற்றும் சம்பள வெட்டுக்கு எதிராவோம் , இடைநிறுத்திய செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கனங்களை உடனடியாக பெற்றுத்தாருங்கள் மற்றும் வாக்குறுதியளித்த பயிர்ச்செய்கை பாதிப்பிற்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குங்கள் போன்ற கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை ஏந்தியும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
சமூக இடைவெளிபேணப்பட்டதுடன், ஆர்பாட்ட காரர்கள் அணைவரும் முகக்கவசம் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM