(ஆர்.விதுஷா)
பயிற்றுனர் பதவிக்கான நியமனக்கடிதங்களை வேலையில்லாப்பட்டதாரிகளுக்கு வழங்குமாறு கோரி ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் மகஜரொன்று கையளித்துள்ளது.
இந்த மகஜரை ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்தே தேரரிக் தலைமையிலான குழுவினர் கொழும்பு கோட்டை புகையிரத நிவைலயத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை ஊர்வலமாக சென்று ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தனர்.
அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
வேலையில்லா பட்டதாரிகளில் அரச நிர்வாகத்துறை அமைச்சின் பயிற்றுனர் பதவிக்கான நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையினை ஜனாதிபதி செயலகம் மேற்கொண்டிருந்தது. இருப்பினும் அதிலும் பல்வேறு குறைப்பாடுகள் காணப்பட்டன. ஆகவே, அந்த குறைபாடுகள் தொடர்பில் பல தடவைகள் உரிய தரப்பினருக்கு எடுத்துரைத்திருந்தோம். ஆனால்எத்தகைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பிரச்சினை மேலும் வலுவடைந்துள்ளதே தவிர இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
சில பட்டதாரிகளுக்கு நியமனக்கடிதங்களும் வழங்கப்படவில்லை பெயர்ப்பட்டியலில் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை, மேலும் சிலருக்கு , பெயர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாதிருந்த போதிலும் நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது, அதேவேளை சிலருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் பெயர்ப்பட்டியலில் பெயர் இல்லை. இவ்வாறான குறைபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.
பொதுத்தேர்தல் இடம் பெறவுள்ளது. இந்நிலையில் இந்த நியமனங்களை இரத்து செய்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு நியமனங்கள் தொடர்பான ஏனைய நடவடிக்கைளை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளது. ஆகவே , இவ்விவகாரம் தொடர்பில் நாம் சுட்டிக்காட்டியிருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதுடன், நியமனங்கள் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் . அதேவேளை , இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடலொன்றையும் எதிர்பார்த்திருக்கின்றோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM